நம்பிக்கை அறிக்கை

ஒரே கடவுளை நம்புகிறேன். விண்ணகமும் மண்ணகமும், காண்பவை காணாதவை, யாவும் படைத்த எல்லம் வல்ல தந்தை அவரே. கடவுளின் ஒரே மகனாய் உதித்த ஒரே ஆண்டவர் இயேசுகிறிஸ்துவை நம்புகிறேன். இவர் காலங்களுக்கெல்லாம் முன்பே தந்தையிடமிருந்து பிறந்தார். கடவுளினின்று கடவுளாக, ஒளியின்றி ஒளியாக, உண்மைக் கடவுளினின்று உண்மைக் கடவுளாக உதித்தவர். இவர் உதித்தவர், உண்டாக்கப் பட்டவர் அல்லர். தந்தையோடு ஒரே பொருளானவர். இவர்வழியாகவே யாவும் படைக்கப்பட்டன. மனிதர் நமக்காகவும், நம் மீட்புக்காகவும ்விண்ணகம் இருந்து இறங்கினார். (“மனிதர்ஆனார்” எனச் சொல்லும் வரை எல்லாரும் தலை வணங்கவும்) தூய ஆவியால் கன்னி மரியாவிடம் உடல்எடுத்து மனிதர் ஆனார். மேலும் நமக்காகப் பொந்தியு பிலாத்தின் அதிகாரத்தில் சிலுவையில் அறையப்பட்டுப், பாடுபட்டு, இறந்து அடக்கம் செய்யப்பட்டார். மறைநூல்களின்படி மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். விண்ணகத்துக்கு எழுந்தருளி,எல்லாம் வல்லதந்தையின் வலப்பக்கம் வீற்றிருக்கின்றார். வாழ்வோரையும், இறந்தோரையும் தீர்ப்பிட, மாட்சியுடன் மீண்டும் வர இருக்கின்றார். அவரது ஆட்சிக்குமுடிவு இராது. தந்தையிடமிருந்தும் மகனிடமிருந்தும் புறப்படும் ஆண்டவரும், உயிர்அளிப்பவருமான தூயஆவியாரை நம்புகிறேன். இவர் தந்தையோடும் மகனோடும் ஒன்றாக ஆராதனையும் மாட்சியும் பெறுகின்றார். இறைவாக்கினர்கள் வாயிலாகப் பேசியவர் இவரே. ஒரே புனித, கத்தோலிக்க, திருத்தூதர்வழிவரும் திருஅவையை நம்புகிறேன். பாவமன்னிப்புக்கான ஒரே திருமுழுக்கை ஏற்றுக்கொள்கிறேன். இறந்தோரின் உயிர்ப்பையும், வரவிருக்கும் மறுஉலகவாழ்வையும் எதிர்பார்க்கிறேன். ஆமென்.