திருச்சபையின் கட்டளைகள் (ஆறு):

1– ஞாயிற்றுக் கிழமைகளிலும், கடன்திருநாள்களிலும் திருப்பலியில் முழுமையாகப் பங்கேற்க வேண்டும்.
இந்நாள்களின் புனிதத்தைப் பாதிக்கக்கூடிய செயல்பாடுகளைத் தவிர்க்க வேண்டும்.

2– ஆண்டிற்கு ஒரு முறையாவது, தகுந்த தயாரிப்புடன் ஒப்புரவு அருள்சாதனத்தில் பங்கேற்க வேண்டும்..

3– பாஸ்கா காலத்தில் ஒப்புரவு அருள்சாதனத்தில் பங்கேற்று திவ்வியநற்கருணை உட்கொள்ள வேண்டும்..

4- திருஅவைகுறிப்பிட்டுள்ள நாள்களில் இறைச்சி உண்ணாதிருக்க வேண்டும். நோன்பு நாள்களில் ஒரு வேளை மட்டும் முழு உணவு உண்ணலாம்..

5 –திருஅவை குறிப்பிட்டுள்ள காலத்திலும், குறைந்த வயதிலும், திருமணத்தடை உள்ள உறவினரோடும் திருமணம் செய்யாதிருக்க வேண்டும்.

6 - திருஅவையின் தேவைகளை நிறைவேற்ற நம்மால் முடிந்த உதவிகளைச் செய்ய வேண்டும்.