பாவசங்கீர்த்தனச் செபம்

எல்லாம் வல்ல இறைவனிடமும், சகோதர சகோதரிகளே,உங்களிடமும் நான் பாவி என ஏற்றுக் கொள்கின்றேன்; ஏனெனில் என் சிந்தனையாலும் சொல்லாலும் செயலாலும் கடமையில் தவறியதாலும் பாவங்கள் பலசெய்தேன்.

(மார்பில்தட்டிக்கொண்டுஅவர்கள்சொல்கின்றனர்)

என்பாவமே, என்பாவமே, என்பெரும் பாவமே. ஆகையால், எப்போதும் கன்னியான புனித மரியாவையும் வானதூதர், புனிதர் அனைவரையும், சகோதர சகோதரிகளே உங்களையும் நம் இறைவனாகிய ஆண்டவரிடம் எனக்காக வேண்டிக்கொள்ள மன்றாடுகின்றேன்.