மூவேளைச் செபம்
(தினமும்காலை 6 மணிக்கும், மதியம் 12 மணிக்கும், மாலை 6 மணிக்கும் சொல்லவேண்டிய செபம்)

முத: ஆண்டவருடைய தூதர் மரியாவுக்குத் தூதுரைத்தார்.
எல்: மரியா தூய ஆவியாரால் கருவுற்றார். (அருள்…)
முத: இதோ ஆண்டவரின் அடிமை.
எல்:உமது சொற்படியே எனக்கு நிகழட்டும். (அருள்…)
முத: வாக்கு மனிதர் ஆனார்.
எல்:நம்மிடையே குடிகொண்டார். (அருள்…)
முத: இயேசுகிறிஸ்துவின் வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதி பெறும்படியாக.
எல்: இறைவனின் தூய அன்னையே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

முத: இறைவா! உம் திருமகன் மனிதர் ஆனதை உம்முடைய வானதூதர் வழியாக நாங்கள் அறிந்திருக்கிறோம். அவருடைய பாடுகளினாலும் இறப்பினாலும் நாங்கள் உயிர்ப்பின் மாட்சி பெற உமது அருளைப் பொழிவீராக. எங்கள் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
- ஆமென்.