தேவ அன்னையின் பிரார்த்தனை


சுவாமி கிருபையாயிரும்
கிறிஸ்துவே கிருபையாயிரும்
சுவாமி கிருபையாயிரும்
கிறிஸ்துவே எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும்
கிறிஸ்துவே எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும்
பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சருவேசுரா - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி
உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சருவேசுரா – எங்களைத்........
பரிசுத்த ஆவியாகிய சருவேசுரா – எங்களைத்.........
அர்ச்சியசிஸ்ட தம திரித்துவமாயிருக்கிற ஏக சருவேசுரா – எங்களைத்......
அர்ச்சியசிஷ்ட மரியாயே- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
சருவேசுரனுடைய அர்ச்சியசிஷ்ட மாதாவே - எங்களுக்காக ...........
கன்னியாஸ்திரிகளுக்குள்ளே உத்தம அர்ச்சியசிஷ்ட மாதாவே - எங்களுக்காக .......
கிறிஸ்துவினுடைய மாதாவே - எங்களுக்காக ...........
தேவப்பிரசாதத்தின் மாதாவே - எங்களுக்காக ...........
மகா பரிசுத்த மாதாவே - எங்களுக்காக ...........
அத்தியந்த விரத்தியாயிருக்கிற மாதாவே - எங்களுக்காக ...........
பழுதற்ற கன்னியாஸ்திரியாயிருக்கிற மாதாவே - எங்களுக்காக ...
கன்னி சுத்தங் கெடாத மாதாவே - எங்களுக்காக ...........
மகா அன்புக்குப் பாத்திரமாயிருக்கிற மாதாவே - எங்களுக்காக .... ஆச்சரியத்துக்கு உரிய மாதாவே - எங்களுக்காக ...........
நல்ல ஆலோசனை மாதாவே - எங்களுக்காக ...........
சிருஷ்டிகருடைய மாதாவே - எங்களுக்காக ...........
இரட்சகருடைய மாதாவே - எங்களுக்காக ...........
மகா புத்தி உடைத்தான கன்னிகையே - எங்களுக்காக ...........
மகா வணக்கத்துக்கு உரிய கன்னிகையே - எங்களுக்காக ...........
பிரகாசமாய் இஸ்துதிக்கப்படயோக்கியமாயிருக்கிற கன்னிகையே- எங்களுக்காக........
சக்தி உடையவளாயிருக்கிற கன்னிகையே - எங்களுக்காக........
தயையுள்ள கன்னிகையே - எங்களுக்காக........
விசுவாசியாயிருக்கிற கன்னிகையே -எங்களுக்காக........
தருமத்தினுடைய கண்ணாடியே - எங்களுக்காக........
ஞானத்துக்கு இருப்பிடமே - எங்களுக்காக........
எங்கள் சந்தோசத்தின் காரணமே -எங்களுக்காக........
ஞான பாத்திரமே - எங்களுக்காக.........
மகிமைக்குரிய பாத்திரமே - எங்களுக்காக........
அத்தியந்த பக்தி உடைத்தான பாத்திரமே -எங்களுக்காக........
தேவ இரகசியத்தைக்கொண்டிருக்கிற ரோசா என்கிற புஸ்பமே - எங்களுக்காக........
தாவீது இராசாவினுடைய உப்பரிகையே - எங்களுக்காக........
தந்த மயமாயிருக்கிற உப்பரிகையே - எங்களுக்காக........
சொர்ண மயமாயிருக்கிற ஆலயமே - எங்களுக்காக........
வாக்குத் தத்தத்தின் பெட்டகமே - எங்களுக்காக........
பரலோகத்தினுடைய வாசலே - எங்களுக்காக........
விடியற் காலத்தின் நட்சத்திரமே - எங்களுக்காக........
வியாதிக் காரருக்கு ஆரோக்கியமே - எங்களுக்காக........
பாவிகளுக்கு அடைக்கலமே - எங்களுக்காக.........
கஸ்திப் படுகிறவர்களுக்குத் தேற்றரவே - எங்களுக்காக........
கிறிஸ்தவர்களுடைய சகாயமே - எங்களுக்காக........
சம்மனசுகளுடைய இராக்கினியே - எங்களுக்காக........
பிதாப் பிதாக்களுடைய இராக்கினியே - எங்களுக்காக........
தீர்க்கதரிசிகளுடைய இராக்கினியே - எங்களுக்காக........
அப்போஸ்தலர்களுடைய இராக்கினியே -எங்களுக்காக........
வேத சாட்சிகளுடைய இராக்கினியே - எங்களுக்காக........
இஸ்துதியருடைய இராக்கினியே - எங்களுக்காக........
சென்ம பாவம் இல்லாமல் உற்பவித்த இராக்கினியே - எங்களுக்காக........
பரலோகத்துக்கு ஆரோபணமான இராக்கினியே - எங்களுக்காக........
பரிசுத்த செபமாலை இராக்கினியே -எங்களுக்காக........
சமாதானத்தின் இராக்கினியே - எங்களுக்காக........
உலகத்தின் பாவங்களைப் போக்கும் சருவேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே –
எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி
(03 முறை.)
முத: இயேசுக் கிறிஸ்து நாதருடைய திருவாக்குத் தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரராய் இருக்கத்தக்கதாக
அனை: சருவேசுரனுடைய பரிசுத்த மாதாவே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
செபிப்போமாக சருவேசுரா சுவாமி! முழுமனதுடனே தண்டணாக விழுந்து கிடக்கிற இந்தக் குடும்பத்தைப் பார்த்து எப்பொழுதும் பரிசுத்த கன்னிகையான முத்திப் பேறுபெற்ற மரியாயினுடைய வேண்டுதலினாற் சகல சத்துருக்களின் சற்பனையிலே நின்று பிரசன்னராய்த் தயை செய்து இரட்சியும். இந்த மன்நாட்டுக்களை எல்லாம் எங்கள் ஆண்டவரான இயேசுநாதருடைய திருமுகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும் - ஆமென்.