தூய ஆவியின் துணையை நோக்கிச் செபம்

தூய ஆவியாரே எழுந்தருளி வாரும். விண்ணகத்திலிருந்து உமது பேரொளியின் அருட்சுடரை எம் மீது அனுப்பிடுவீர். எளியோரின் தந்தையே வந்தருளுவீர். நன்கொடை வள்ளலே வந்தருளுவீர். இதய ஒளியே, வந்தருளுவீர். உன்னத ஆறுதலானவரே, ஆன்ம இனிய விருந்தினரே, இனிய தன்மை தருபவரே, உழைப்பின் களைப்பைத் தீர்ப்பவரே, வெம்மை தணிக்கும் குளிர் நிழலே, அழுகையில் ஆறுதல் ஆனவரே, உன்னதப் பேரின்ப ஒளியே, உம்மை நம்புவோரின் இதயத்தின் ஆழம் நிரப்பிடுவீர். உமது அருள் ஆற்றல் இல்லாமல் மனிதரில் எதுவுமில்லை. மாசு கொண்டதை கழுவிடுவீர். வரட்சி உற்றதை நனைத்திடுவீர். காயப்பட்டதை ஆற்றிடுவீர். வணங்காதிருப்பதை வளைத்திடுவீர். குளிரானதை குளிர் போக்கிடுவீர். தவறிப்போனதை ஆண்டருளுவீர். இறைவா உம்மை நம்பும் அனைவருக்கும் உமது ஏழு கொடைகளையும் வழங்கிடுவீர். புண்ணிய பலன்களையும் வழங்கிடுவீர். இறுதியில் மீட்பை அளித்து அழிவில்லா இன்பமும் அருள்வீரே. - ஆமென்.